கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துக்கூறிய அவர் தெரிவித்ததாவது: விடுதலைப் புலிகள் இயக்கம் பலவீனமடையும்போது சர்வதேச ரீதியிலும் தேசிய ரீதியிலும் பல்வேறு ஆழுதங்கள் பிரயோகித்து பேச்சுவார்த்தை என்ற தோரணையில் தம்மை மீள கட்டியெழுப்புவதே வரலறாகவுள்ளது. இதனை நான் கூறவேண்டிய அவசியமில்லை. ஊடகவியலாளர் என்ற ரீதியில் நீங்கள் இதனை அறிந்து இருப்பீர்கள் ஜனாதிபதி ரணசிங்க பிரேம தாஸாவின் காலத்தில் ஹில்டன் ஹொட்டலில் பல மாதங்களாக சமாதானப் பேச்சுக்கள் நடைபெற்றன. இறுதியில் புலிகளால் 600க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இந்த உபாயத்தை அடிக்கடி புலிகள் கையாண்டுவருகின்றனர்.
2008-08-12
ஒழுக்க விழுமியமுள்ள மனிதர்களாக விடுதலைப் புலிகள் நடந்து கொண்டால் மாத்திரமே சமாதான முயற்சி சாத்தியம் - கெஹலிய
கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துக்கூறிய அவர் தெரிவித்ததாவது: விடுதலைப் புலிகள் இயக்கம் பலவீனமடையும்போது சர்வதேச ரீதியிலும் தேசிய ரீதியிலும் பல்வேறு ஆழுதங்கள் பிரயோகித்து பேச்சுவார்த்தை என்ற தோரணையில் தம்மை மீள கட்டியெழுப்புவதே வரலறாகவுள்ளது. இதனை நான் கூறவேண்டிய அவசியமில்லை. ஊடகவியலாளர் என்ற ரீதியில் நீங்கள் இதனை அறிந்து இருப்பீர்கள் ஜனாதிபதி ரணசிங்க பிரேம தாஸாவின் காலத்தில் ஹில்டன் ஹொட்டலில் பல மாதங்களாக சமாதானப் பேச்சுக்கள் நடைபெற்றன. இறுதியில் புலிகளால் 600க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இந்த உபாயத்தை அடிக்கடி புலிகள் கையாண்டுவருகின்றனர்.
ருஹுனு பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் மோதல் 11 பேர் ஆஸ்பத்திரியில் இருவரின் நிலைமை கவலைக்கிடம்
யாழ்ப்பாணத்தில் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கு கப்பல் செலவை அரசு பொறுப்பேற்கக் கோரிக்கை
இத்தகைய அதிகரித்த விலையைக் குறைப்பதற்கு வழி கப்பல் செலவினங்களை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். இது தான் விலைகளைக் குறைப்பதற்குரிய ஒரேயொரு வழி எனவும் யாழ் மாவட்ட சமாதானத்திற்கும் நல்லெணத்திற்குமான மக்கள் குழுவின் இணைச் செயலாளர் எஸ்.பரமநாதன் தெரிவித்துள்ளார்.
மடுக்கோவிலுக்குச் செல்ல தென்பகுதிகளில் இருந்து வருபவர்களுக்காக, மதவாச்சியில் 20 பஸ் வண்டிகள் தயார்
எனினும் மதகுருமார்களைத் தவிர்ந்த வேறு எவரும் மடுக்கோவிலுக்குச் செல்வதற்கு நேற்று படையினர் அனுமதிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மடு அன்னை மீண்டும் மடுக்கோவில் பிரதிஸ்டை செய்யப்படும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மாரவில பகுதியில் இருந்து மூதாட்டி ஒருவர் மதவாச்சி மன்னார் வீதியில் உள்ள மடுக்கோவில் சந்தியில் வந்து காத்திருந்ததாகவும், எனினும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி இல்லாத காரணத்தினால் மடுக்கோவிலுக்குச் செல்வதற்கு அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் மடுக்கோவிலுக்குச் செல்வதற்காக தென்பகுதியில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை மதவாச்சியைச் சென்றடைந்த சில பக்தர்களை பொலிசார் அங்கிருந்து 2 பஸ் வண்டிகளி;ல் மடுக்கோவிலுக்கு அனுப்பி வைத்ததாக மதவாச்சியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளொன்றிற்கு 200 பக்தர்கள் மடுக்கோவிலுக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ள அதேவேளை, மடுக்கோவிலுக்குச் செல்பவர்கள் அதே தினம் அங்கிருந்து திரும்பிவிட வேண்டும் என படையினர் அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இம்முறை மடுமாதாவின் ஆவணி மாதத் திருவிழா நடைபெற மாட்டாது என்றும், காலை நேரத்தில் மாத்திரம் பூஜை நடைபெறும் என்று மன்னார் ஆயர் இல்லம் அறிவித்துள்ளது.
கல்ப் டைம்ஸ் பத்திரிகை தனது பட விளக்கத்தில் விட்ட தவறுக்காக மன்னிப்பு கோரியுள்ளது
ஒலிம்பிக்கின் ஆரம்ப நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக சீனாவுக்கு தனது பாரியாருடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விஜயம் செய்திருந்த புகைப்படத்தின் படவிளக்கத்தில் விடப்பட்ட தவறு தொடர்பில் கல்ப் டைம் பத்திரிகை மன்னிப்பு கோரியுள்ளது. இது தொடர்பில் தாம் மன்னிப்பு கோரியும் இந்த படம் மற்றும் படவிளக்கத்தையும் நாளை மீள் பிரசுரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8.8.08 இல் 8 மணி 08 நிமிடத்தில் 8 இறாத்தல் 8 அவுன்ஸில்.. 2 குழந்தைகள்
ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சியை 100 வீதம் ஏற்றுக் கொள்ள முடியாது -மைத்திரிபால சிறிசேன
விருந்து உணவை உண்ட 60 பேர் வயிற்று நோவால் வைத்தியசாலையில் அனுமதி
தவறு விட்ட பத்திரிகை
ஒலிம்பிக்கின் ஆரம்ப நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக சீனாவுக்கு தனது பாரியாருடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விஜயம் செய்திருந்தமை அனைவரும் அறிந்த ஒரு விடயம்.இது குறித்து கல்ப் டைம்ஸ் என்ற பத்திரிகை தனது பட விளக்கத்தில் இலங்கை ஜனாதிபதியின் பாரியாரை சிறிமாவோ பண்டாரநாயக்க என்று தவறாக குறிப்பிட்டுள்ளது.
நளினியின் விடுதலை தொடர்பான வழக்கில் 20ஆம் திகதி பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும்-தமிழக அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சிறை விதிகளின்படி 14 ஆண்டுகள் ஆயுள் தண்டனை பெற்ற கைதி நன்னடத்தை விதிகளின்படி விடுதலை செய்யப்பட வேண்டும். இது தொடர்பாக சிறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் அடங்கிய ஆலோசனைக் குழுவிடம் முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அந்த மனு ஆலோசனைக் குழுவால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை அடிப்படையாகக் கொண்டு தமிழக அரசு என்னை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு மறுப்புத் தெரிவித்து விட்டது. எனவே, இந்த முடிவை ரத்துச் செய்ய வேண்டும்; முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் நளினி கூறியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி நாகமுத்து முன்னிலையில் நடைபெற் வருகிறது. நேற்று இந்த வழக்கானது மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் மாசிலாமணி ஆஜராகி பதில்மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து நீதிபதி எதிர்வரும் 20ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தார். அன்றைய தினம் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.இதேபோன்று ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வரும் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய இரண்டு இலங்கை தமிழர்களும் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி மனுதாக்கல் செய்திருந்தனர்.
அந்த இரண்டு மனுக்களையும் இதே வழக்கோடு சேர்த்து விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்தார். மேலும், நளினி ஆலோசனைக் குழுவிடம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கையும் தன்னுடன் சேர்த்து விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்தார். ஆனால், அந்த வழக்கில் ஆஜரான சட்டத்தரணி ராதாகிருஷ்ணன் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.
ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி தொடர்ந்த வழக்கில், அவரது வழக்கறிஞர் ரவி இந்த வழக்கோடு தங்களது வழக்கையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். எனினும், நீதிபதி அதற்கு மறுப்பு தெரிவித்தார்.
வன்னியில் தொடர்ந்து இடம்பெயரும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் சென்றடைய வேண்டும்,அனைத்துலக மனித உரிமை கண்காணிப்பகம் அறிவிப்பு
மடுமாதாவை வழிபட தினமும் 200 பக்தர்களுக்கு அனுமதி - பாதுகாப்பு அமைச்சு
நாளை செவ்வாய்க்கிழமை முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை மடு புனிதத்தல பிரதேசத்திற்கு பொது மக்கள் பகல் வேளைகளில் பிரவேசிக்க முடியும் எனவும் அங்கு சமய வழிபாடுகளில் ஈடபட முடியும் எனவும் பாதுகாப்பு அமைச்சு இன்று இரவு அறிவித்துள்ளது.
மடு தேவாலயத்தை சூழவுள்ள பிரதேசங்களை குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளதால் தினமும் 200 பக்தர்களை அனுமதிக்க தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சு,தேவாலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு தேவையான குடிபானங்களை வழங்க படையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
2008-08-11
ஜார்ஜியாவின் தெற்கு ஒசெட்டியா மாகாணத்தில் அந்நாட்டு படைக்கும், ரஷியப் படைக்கும் இடையே இதுவரை நடந்த சண்டையில் 1,500 பேர் பலி
ஐ.நா. எச்சரிக்கை: ஜார்ஜிய ராணுவத்துக்கும் ரஷிய ராணுவத்துக்கும் இடையேயான சண்டையில் பொதுமக்கள் கொல்லப்படுவதை ஐ.நா. கண்டித்துள்ளது. ஜார்ஜியாவில் கொல்லப்படும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து, நிலைமை மோசமாகி வருகிறது. இதை தான் கடுமையாக கண்டிப்பதாக ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஜார்ஜியாவின் தெற்கு ஒசெட்டியா ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதைத் தங்கள் வசம் கொண்டுவர ஜார்ஜியா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதனால் அங்கு முகாமிட்டுள்ள ரஷியப் படைகளுக்கும், அந்நாட்டு படைகளுக்கும் இடையே அவ்வப்போது சண்டை நடந்து வருகிறது. இந்தச் சண்டை வெள்ளிக்கிழமை முற்றியது. ரஷியப் படைகள் மீது ஜார்ஜியா படை திடீரென அதிரடித் தாக்குதல் நடத்தியது.
தாய்லாந்தில் ஹெலிகொப்டர் விபத்து 4 இராணுவ அதிகாரிகள் உட்பட 10 பேர் பலி
இலங்கையில் போர் தீவிரம் அப்பாவி தமிழர்களுக்கு பாதுகாப்பு தேவை: ஐ.நா. வலியுறுத்தல்
ராகம விகாரையில் யானை மிரண்டது பெண் ஒருவர் பலி 32பேர் படுகாயம்
மற்றவர்கள் கண்ணுக்கு புலப்படாமல் உலாவ உதவும் மாய மேலாடை உருவாக்கும் முயற்சியில் வெற்றியை நெருங்கியுள்ளதாக விஞ்ஞானிகள் அறிவிப்பு
பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் அச்சத்துடன் வன்னி மாணவர்கள் உயர்தரப் பரீட்சை எழுதும் நிலை - ஐ.நா. முகவர் அமைப்புக்கள் தகவல்
வன்னியில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதில் மாணவர்கள் பாரிய இன்னல்களுக்கு முகங் கொடுத்து வருகின்றனர். விமானக் குண்டு வீச்சுக்களும் ஷெல் தாக்குதல்களும் எந்த வேளையிலும் இடம்பெறலாம் என்ற சூழ்நிலையில் அச்சத்தின் மத்தியிலேயே மாணவர்கள் பரீட்சைக்குச் செல்கின்றனர் என ஐ.நா. முகவர் நிறுவனங்களின் நிலையியற் குழு தெரிவித்துள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய கட்டுப்பாடற்ற பிரதேசங்களில் ஏற்கனவே மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 6 ஆம் திகதி பரீட்சை ஆரம்பமான பின்னர் இடம்பெற்ற ஷெல் தாக்குதல்களால் பரீட்சை நிலையங்களை இடம் மாற்ற வேண்டி ஏற்பட்டதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள ஐ.நா. வின் முகவர் நிறுவனங்களின் நிலையியற் குழு, வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் மக்கள் தொடர்ந்தும் இடம்பெயர்ந்து வருகின்றனர்.
இதனால் வன்னியில் மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். இந்த நிலையில் அங்கு தொடரும் விமானக் குண்டு வீச்சுக்கள் மற்றும் ஷெல் தாக்குதல்களால் மாணவர்கள் அச்சத்தின் மத்தியிலேயே பரீட்சை எழுத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.புதிதாக இடம்பெயரும் மக்கள் தற்காலிக தங்குமிடத்தையும் உணவையும் பெறுவதற்கே பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர். இந்த நிலையில் மாணவர்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.
கம்பஹா, கண்டி பகுதிகளில் தேடுதல்; 19 தமிழர்கள் கைது
யாழ்ப்பாணத்தில் இருந்து படையினர் பூநகரியை நோக்கி எறிகணைத் தாக்குதல்
ஜோர்ஜியா மீது ரஸ்ய விமானங்கள் தாக்குதல் 2000க்கும் அதிகமான மக்கள் உயிரிழப்பு
புலிகள் ஆயுத விநியோகத்திற்கு இந்தியாவின் மீது தங்கியிருக்கும் நிலை அதிகரித்துள்ளது- ஐ.ஏ.என்.எஸ் செய்திச் சேவை
இலங்கையில் கடுமையான இராணுவ மோதல் நடந்துகொண்டிருக்கின்ற நிலையில், விடுதலைப் புலிகள் தமிழ் நாட்டிலிருந்து தமக்கான உதவிகளைப் பெற்றுக் கொள்ள முயற்சிப்பதாகவும் ஐ.ஏ.என்.எஸ் தெரிவித்துள்ளது.இந்த வருடம் ஜூலை முதலாம் திகதியிலிருந்து இதுவரை 7 இந்திய மற்றும் இலங்கைத் தமிழர்களை தமிழ் நாட்டுப் பொலிசார் கைது செய்துள்ளதாகவும், இவர்களில் விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட கடற்புலித் தலைவர்களில் ஒருவரான தம்பி அண்ணா என்பவரும் அடங்குவதாக ஐ.ஏ.என்.எஸ் தெரிவித்துள்ளது.கைது செய்யப்பட்டடோரில் 7 பேர் பண ரீதியான இலாபத்தினைக் கருத்திற்கொண்டே விடுதலைப் புலிகளுக்கு உதவ முனைந்ததாக விசாரணைகளின்போது தெரிவித்துள்ளனர்.
ஐஎன்லங்கா இணையம்குறிப்பாக, இந்த சந்தேகநபர்கள் விடுதலைப் புலிகளுக்கு தொலைத் தொடர்பு உபகரணங்களையே கடத்த முற்பட்டிருப்பதாகவும் அந்த செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகள் தற்போது பாரிய வளப்பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளதாகவும், அதன்பொருட்டு இந்தியாவின் மீதும், தமிழ் நாட்டின் மீதும் புலிகள் தங்கியிருக்கவேண்டிய நிலை அதிகரித்துள்ளதாகவும் கைது செய்யப்பட்ட நபர்கள் விசாரணைகளின் போது தெரிவித்ததாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேர்வின் சில்வாவின் காடைத்தனத்திற்கு மக்கள் பாடம் புகட்டுவர் -இடதுசாரி முன்னணி
அவிசாவளையில் போலி கச்சேரி கண்டுபிடிப்பு
போலிக் கடவுச்சீட்டில் கனடா செல்ல முற்பட்ட இலங்கைப் பிரஜை சென்னையில் கைது
ஐக்கிய தேசியக் கட்சி நொண்டிக்குதிரை இதனாலேயே அரசுடன் இணைந்துள்ளோம் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கூறுகிறார்
மலையக மக்களுக்கு உண்மையாக சேவை செய்ய எண்ணுபவர்கள் இ.தொ.கா.வுடன் இணைந்தும் கொள்வார்கள். சுயநல நோக்கமுள்ளவர்கள் வெளியேறி விடுவார்கள். யார் வேண்டுமென்றாலும் வரலாம், போகலாம். ஆனால் இ.தொ.கா தலைநிமிர்ந்து நிற்கும். அதற்கு மக்களின் பேராதரவு உள்ளது.
நாம் அரசாங்கத்துடன் இணைந்துள்ளது குறித்து விமர்சனம் செய்யப்படுகின்றது. நாம் சிறுபான்மையினத்தவர்கள். தனியாக ஆட்சி அமைக்க முடியாது. ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ பதவி வகிக்க முடியாது. ஆனால் அரசாங்கம் யார் என்பதனை தீர்மானிக்க முடியும்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஐ.தே. கட்சியை ஆதரித்தோம். அக்கட்சி வெற்றி பெறவில்லை. நாம் எவ்வளவுதான் உதவி செய்தாலும் அக்கட்சி வெற்றி பெற முடியாத நிலையில் நாம் அரசாங்கத்துடன் இணைந்துள்ளோம்.
ஐ.தே.க. தற்போதைய நிலையில் ஒரு நொண்டிக் குதிரை. அக்குதிரையில் ஓட முடியாது. ஓடும் குதிரையாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் திகழ்கின்றது. இதனால்தான் நாம் அரசில் இணைந்துள்ளோம். இதன் மூலம் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்ளலாம். இதனை தெரியாதவர்கள் தான் எம்மை விமர்சனம் செய்கின்றனர்.
சாதாரணமானவர்கள் கூட ஓடும், வெற்றி பெறும் குதிரைகளையே மட்டுமே விரும்புவார்கள். நொண்டிக் குதிரையை விரும்பமாட்டார்கள். நாமும் அதனை செய்கின்றோம்.
மேலும் யானைக்கு மேல் சேவல் போகலாம். அல்லது கதிரைக்கு மேல் வெற்றிலைக்கு மேல் சேவல் பயணம் செய்யலாம். எனினும் சேவலுக்கு மேல் எதனையும் பயணம் செய்ய இ.தொ.கா என்றுமே அனுமதிக்காது.
மத்திய, ஊவா மாகாணங்களிலும் இ.தொ.கா. ஆட்சியை அமைக்கும் சக்தியாகவுள்ளது. அதேபோல், சப்ரகமுவ மாகாணத்திலும் இந்த நிலை ஏற்பட எதிர்வரும் 23 ஆம் திகதி காலையில் முருகனை கும்பிட்டு விட்டு சேவலுக்கு வாக்களித்து நமது ஒற்றுமையையும், மலையக சமூகத்தின் பலத்தையும் நிரூபிக்குமாறு வேண்டுகின்றேன். இங்கு பிரதி அமைச்சர்களான எம். சச்சிதானந்தன், ஜெகதீஸ்வரன், முத்து சிவலிங்கம் உள்ளிட்ட பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.
மன்னாரில் சிவில்நிருவாகத்தை வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை -கரு ஜெயசூரிய
மன்னார் மாவட்டத்தின் அரச சொத்துக்கள் யாவும் புலிகளினால் அழித்தொழிக்கப்பட்டுள்ளதோடு; சிவில் நிருவாகத்தையும் புலிகள் சீர்குலைத்துள்ளனர் என்றும் அமைச்சர் கூறினார்.தற்போது அரச கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள மன்னார் மாவட்டத்தினை வழமை நிலைக்கு கொண்டுவருவதற்கான சகல நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இரு பெண் புலி உறுப்பினர்களது சடலங்கள் செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைப்பு
2008-08-09
அபராதம் விதிக்கப்பட்டவர் ஜனாதிபதியுடன் ஒலிம்பிக் பார்க்க சீனாவுக்கு செல்கிறார்.. இதுசரியான நடைமுறையா? என்று கேட்கிறார் விஜித ஹேரத்
பொதுச்சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தார் என்று குற்றஞ் சாட்டப்பட்டு நீதிமன்றத்தால் 5இலட்சம் அபராதம் விதிக்கப்பட்ட திறைசேரியின் செயலாளர் பி.பி ஜயசுந்தரவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை கண்டுகளிப்பதற்காக சீனாவுக்கு அழைத்து சென்றுள்ளார். இதுசரியான நடைமுறையா? இவ்வாறு நாடாளுமன்றத்தில் விஜித ஹேரத் கேள்வியெழுப்பினார். பொதுச்சொத்தை விரயம் செய்த ஒரு குற்றவாளிக்கு ஜனாதிபதி இவ்வாறு கௌரவத்தை மேலும்...
2008-08-08
மணலாற்றில் படையினரின் முன்னகர்வு முயற்சி முறியடிப்பு - புலிகள் அறிவிப்பு
மணலாறு பகுதியில் ஐந்து முனைகளில் முன்னேற முயன்ற படையினரின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த மோதலின் போது நான்கு படையினரின் சடலங்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். நேற்று வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் கடும் ஷெல்தாக்குதலை நடத்தியவாறு ஐந்து முனைகளில் படையினர் முன்னேற முயன்றனர். இதனை வழிமறித்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த மோதலில்
மேலும்...
வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைக்கும் கொடும்துயரம். - மூன்று வாரங்களில் லண்டனில் நால்வர் தற்கொலை! :த ஜெயபாலன்
ஓகஸ்ட் 4 காலை 10 மணியளவில் கிழக்கு இலண்டன் தமிழ் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கிழக்கு லண்டனில் தனது வீட்டில் இருந்து சிறு தொலைவில் உள்ள ரெட்பிறிஜ் ஸ்ரேசனில், ரெயினின் முன் பாய்ந்து இவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். கிழக்கு லண்டன் வர்தகப் பிரமுகரும் வோல்தம்ஸ்ரோ கற்பகவிநாயகர் ஆலயத்தின் நிறுவனருமான கோபாலகிருஸ்ணன் தம்பதிகளின் ஒரே மகனான அகிலன் கோபாலகிருஸ்ணனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனக்கு முன் சிறந்த ஒளிமயமான
மேலும்....
எதிர்காலத்தில் பிரபாகரனுக்கு என்ன நடக்கும் என்பதல்ல விடயம்; எனது நேசத்திற்குரிய போராளிகளின் நிலைமை என்னவாகும் என்பதுவே எனதுகவலை!! –கருணாஅம்மான் பேட்டி
மேலும்...
பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்தப் போவதில்லை என அரசாங்கம் கூறுகிறது
பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்பதற்கான மனிதாபிமான நடவடிக்கைகளை கைவிடப்போவதில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டுஉரையாற்றிய பாதுகாப்பு பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்காகப் பிராந்திய வல்லரசான இந்தியா சார்க் மாநாட்டின்போது உடன்பாட்டுக்கு வந்தமை இலங்கை அரசாங்கத்திற்கு கிடைத்த வெற்றியாகும் எனவும் அமைச்சர் கெஹெலிய இங்கு சுட்டிக்காட்டினார்.
மேலும்....
பெங்களூரில் இன்றும் ஒரு குண்டுவெடிப்பு
பெங்களூர்: பெங்களூர் நாகரபாவியில் இன்று ஒரு சிறிய குண்டு வெடித்தது.
மைசூர் ரோட்டில் உள்ள நாகரபாவி பகுதியின் குப்பைத் தொட்டியில் இந்த குண்டு வெடித்தது. இதில் யாரும் காயமடையவில்லை.
முன்னதாக இது புரளி என போலீசார் தெரிவி்த்தனர். ஆனால், பின்னர் வெடித்தது குண்டு தான் என பெங்களூர் நகர போலீஸ் கமிஷ்னர் சங்கர் பித்ரி தெரிவித்தார்.
மேலும்....
அம்பாறையில் சிறிலங்கா அதிரடிப்படையினர் - கருணா குழுவினர் முறுகல்: அப்பாவி பொதுமக்கள் இருவர் கைது
அம்பாறை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில் சின்னத்தோட்டம் பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருக்கும் கருணா குழுவினருக்கும் இடையில் இடம்பெற்றுள்ள முறுகல் சம்பவத்தால் அப்பாவி பொதுமக்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.இந்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது:-
மேலும்...
முல்லைத்தீவை நோக்கி வெலிஓயா இராணுவத்தினர் நள்ளிரவில் நடத்திய கடும் எறிகணைத் தாக்குதல்: குழந்தை பலி; முல்லைத்தீவு அரச அதிபர் உட்பட 16 பேர் காயம்.
முல்லைத்தீவு நகரப்பகுதியை நோக்கி நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் இராணுவத்தினர் நடத்திய கடுமையான எறிகணைத் தாக்குதலில் ஒரு வயதுக் குழந்தையொன்று உடல் சிதறி மரணமாகியுள்ளது. முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி எமில்டா சுகுமார் மற்றும் முல்லைத்தீவு வைத்தியசாலைப் பணிப்பாளரின் மனைவி உட்பட 16 பேர் காயமடைந்துள்ளனர்
மேலும்....
தனது வெளியேற்றத்துடன் புலிகள் 60 வீத பலத்தினை இழந்துவிட்டனர் என்கின்றார் கருணா!
புலிகளுக்கு பெருமளவில் வெற்றிகளை ஈட்டிக் கொடுத்தது வலிந்த தாக்குதல்களே ஆகும் , நான் கூட வலிந்த தாக்குதல்களையே விரும்பிசெய்தேன் , ஆயுத வினியோகம் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருக்கும் விடுதலை இயக்கங்களுக்கு வலிந்த தாக்குதல் சாதகமாக இருக்கும் என கருணா சுருதிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்து இருக்கின்றார். அவர் மேலும் கூறுகையில் தற்போது படையினர் வலிந்த தாக்குதல்களை மேற்கொண்டுள்ள நிலையில் பாதுகாப்பு யுத்தத்தினை நடத்த வேண்டிய நிலைக்கு புலிகள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள், தற்பாதுகாப்பு யுத்தத்திற்கு தொடர்ச்சியான ஆயுத வினியோகம் இருக்கவேண்டும், பல முன் தாயாரிப்புக்களை மேற்கொள்ளவேண்டும்,
மேலும்...
கிளாலியில் இருந்து நாகர் கோவில் , மன்னார் கடற்கரையில் இருந்து கொக்கு தொடுவாய் ?
மேலும்....
முல்லைதீவிலும், கிளிநொச்சியிலும் கடும் யுத்தத்திற்காக காத்திருக்கும் புலிகள்!
மேலும்....
வெளிநாட்டு அதிகாரிகள் மீது ஈ கூட மொய்க்காத அளவுக்கு பாதுகாப்பு; அமைச்சர் ரோஹித பெருமிதம்
மேலும்.....
வாழைச்சேனையில் ஐஸ்வாடி உரிமையாளர் வீட்டின்மீது குண்டுவீச்சு // வாரியப்பொல வீதியில் டிப்பர் வாகனம் வெள்ளைவேனில் வந்தவர்களால் கடத்தல்
மேலும்...
புலிகளுக்கு பொருட்கள் கடத்த முற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இலங்கையர்கள் 11 பேர் கைது
மேலும்...
அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்
மேலும்...
மன்னார் அரச செயலக கூட்டங்களிற்கு ஊடகவியலாளர்கள் அழைக்கப்படுவதில்லையென கவலை
அரச செயலகத்தில் நடைபெறும் எவ்விதக் கூட்டங்களுக்கும் கருத்தரங்குகளுக்கும் மன்னார் ஊடகவியளார்கள் எவரும் அழைக்கப்படுவதில்லை . கூட்டங்கள் அனைத்தும் மூடிய திரைக்குள் நடைபெறுவதாக மன்னார் ஊடகவியளாலளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும்...
இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங் திரும்பிச் சென்ற பின்பும் இந்தியப்படை விவகாரம் இன்னும் அடங்கவேயில்லை..
மணலாறில் ஐந்து முனை முன்னேற்ற நடவடிக்கை முறியடிப்பு: இராணுவத்தினரின் நான்கு உடலங்கள் உட்படப் படைப்பொருட்கள மீட்பு
முல்லைத்தீவை நோக்கி வெலிஓயா இராணுவத்தினர் நள்ளிரவில் நடத்திய கடும் எறிகணைத் தாக்குதல் - முல்லைத்தீவு அரச அதிபர் உட்படப் பலர் காயம்.