இது நடுநிலமை செய்திகள் எவரையுமே தாக்குவனஅல்ல

2008-08-11

மேர்வின் சில்வாவின் காடைத்தனத்திற்கு மக்கள் பாடம் புகட்டுவர் -இடதுசாரி முன்னணி

தொழில் அமைச்சர் மேர்வின் சில்வா தனது வழமையான கீழ்த்தரமான காடைத்தனத்தை ஜனாதிபதிக்குத் தெரியாமல் சிரச ஊடகவியலாளர்கள் மீது மேற்கொண்டிருக்க முடியாதென்றும், மேர்வின் சில்வாவுக்கு மக்கள் விரைவில் பாடம் புகட்டுவரென்றும் இடதுசாரி முன்னணி விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் காரியாலயத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பையேற்றே சிரச ஊடகவியலாளர்கள் பால திறப்பு விழாவுக்கு சென்றுள்ளனர். அங்கே பட்டப்பகலில் எல்லோர் முன்னிலையிலும் ஊடகவியலாளர்களை தாக்கியதுடன் ஊடக உபகரணங்களையும் மேர்வின் சில்வா கொள்ளையடித்துள்ளார். தொடரும் மேர்வின் சில்வாவின் அடாவடித்தனங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படா விட்டால் விரைவில் மக்கள் நலல பாடத்தைப் புகட்டும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றும் கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.