இது நடுநிலமை செய்திகள் எவரையுமே தாக்குவனஅல்ல

2008-08-11

போலிக் கடவுச்சீட்டில் கனடா செல்ல முற்பட்ட இலங்கைப் பிரஜை சென்னையில் கைது

போலியான கடவுச்சீட்டு மூலம் கனடாவுக்குச் செல்ல முற்பட்ட இலங்கையர் ஒருவரை தமிழகத்தின் சென்னை விமான நிலையத்தில் வைத்து குடிவரவு அதிகாரிகள் கைது செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலைய குடிவரவு அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன. இலங்கைப் பிரஜையான இவர் கொழும்பிலிருந்து திருச்சி சென்று பின்னர் சென்னையிலிருந்து கனடாவுக்குச் செல்ல முயற்சித்துள்ளார். இவருடைய கடவுச்சீட்டையும் சுங்க அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் கைப்பற்றியுள்ளனர்.