இது நடுநிலமை செய்திகள் எவரையுமே தாக்குவனஅல்ல

2008-08-12

யாழ்ப்பாணத்தில் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கு கப்பல் செலவை அரசு பொறுப்பேற்கக் கோரிக்கை

நாட்டின் ஏனைய இடங்களிலும் பார்க்க யாழ்ப்பாணத்தில் பொருடகளின் விலைகள் பல மடங்காக இருப்பதைச் சுட்டிக்காட்டி, இதனைக் குறைப்பதற்கு கப்பல் செலவை அராசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என சமாதானத்தி;ற்கும் சமாதானத்திற்கும் நல்லெண்ணத்திற்குமான மக்கள் குழு கோரிக்கை விடுத்துள்ளதாக அந்த அமைப்பின் இணைச் செயலாளர் எஸ்.பரமநாதன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் சங்கக் கடைகளில் சீனி 68 ரூபா 50 சதத்திற்கு விற்பனை செய்தாலும், ஒரு ஆளுக்கு அரை கிலோ மட்டுமே கொடுக்கப்படுவதாகவும், வெளிக்கடைகளில் 80, 90 ரூபாவுக்கு விற்கப்படுவதாகவும், அரிசி 90 ரூபா தொடக்கம் 120 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகவும், பரமநாதன் தெரிவித்துள்ளார். கெர்ழும்பில் 95 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் பூடு யாழ்ப்பாணத்தில் 320 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. கொழும்பில் 60, 75 ரூபாவுக்குக் கிடைக்கின்ற உருளைக்கிழங்கின் யாழ்ப்பாணத்து விலை 150 ரூபா.
இத்தகைய அதிகரித்த விலையைக் குறைப்பதற்கு வழி கப்பல் செலவினங்களை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். இது தான் விலைகளைக் குறைப்பதற்குரிய ஒரேயொரு வழி எனவும் யாழ் மாவட்ட சமாதானத்திற்கும் நல்லெணத்திற்குமான மக்கள் குழுவின் இணைச் செயலாளர் எஸ்.பரமநாதன் தெரிவித்துள்ளார்.