இது நடுநிலமை செய்திகள் எவரையுமே தாக்குவனஅல்ல

2008-08-12

விருந்து உணவை உண்ட 60 பேர் வயிற்று நோவால் வைத்தியசாலையில் அனுமதி

வட்டவலை அகரவத்தை தோட்டப் பகுதியில் பூப்புனித நீராட்டு விழா ஒன்றில் பரிமாறப்பட்ட உணவை உண்ட 60 பேர் திடீர் வயிற்று நோவு கண்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலோனோர் கினிகத்ஹேன வைத்தியசாலையிலும் ஏனையோர் வட்டவளை மற்றும் நாவலப்பிட்டிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட வைபவம் இடம்பெற்ற வீட்டின் உரிமையாளருக்கு தனிப்பட்ட ரீதியில் வேண்டத்தகாதவர்களே உணவில் ஏதோ ஒன்றை கலந்து விட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.எனினும் உணவில் எதுவும் கலக்கவில்லை எனவும் அருந்தும் நீரிலேயே குறிப்பிட்ட நபர்கள் ஏதோ பதார்த்தத்தை கலந்து விட்டிருக்கலாம் என வீட்டு உரிமையாளர் தெரிவிக்கிறார்