புத்தளம் மாவட்டம் சிலாபம் வாரியப்பொல வீதியில் டிப்பர் ரக வாகனமொன்று நேற்றிரவு இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டுள்ளது. வெள்ளைவேனில் பயணம் செய்த நால்வர் இந்த டிப்பர் வண்டியைக் கடத்திச் சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பொலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.மேலும்...

