இது நடுநிலமை செய்திகள் எவரையுமே தாக்குவனஅல்ல

2008-08-08

மணலாற்றில் படையினரின் முன்னகர்வு முயற்சி முறியடிப்பு - புலிகள் அறிவிப்பு

மணலாறு பகுதியில் ஐந்து முனைகளில் முன்னேற முயன்ற படையினரின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த மோதலின் போது நான்கு படையினரின் சடலங்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். நேற்று வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் கடும் ஷெல்தாக்குதலை நடத்தியவாறு ஐந்து முனைகளில் படையினர் முன்னேற முயன்றனர். இதனை வழிமறித்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த மோதலில்
மேலும்...

வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைக்கும் கொடும்துயரம். - மூன்று வாரங்களில் லண்டனில் நால்வர் தற்கொலை! :த ஜெயபாலன்

ஓகஸ்ட் 4 காலை 10 மணியளவில் கிழக்கு இலண்டன் தமிழ் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கிழக்கு லண்டனில் தனது வீட்டில் இருந்து சிறு தொலைவில் உள்ள ரெட்பிறிஜ் ஸ்ரேசனில், ரெயினின் முன் பாய்ந்து இவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். கிழக்கு லண்டன் வர்தகப் பிரமுகரும் வோல்தம்ஸ்ரோ கற்பகவிநாயகர் ஆலயத்தின் நிறுவனருமான கோபாலகிருஸ்ணன் தம்பதிகளின் ஒரே மகனான அகிலன் கோபாலகிருஸ்ணனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனக்கு முன் சிறந்த ஒளிமயமான
மேலும்....

எதிர்காலத்தில் பிரபாகரனுக்கு என்ன நடக்கும் என்பதல்ல விடயம்; எனது நேசத்திற்குரிய போராளிகளின் நிலைமை என்னவாகும் என்பதுவே எனதுகவலை!! –கருணாஅம்மான் பேட்டி

வணக்கம்! கடந்த வாரங்களில் மட்டக்களப்பில் உள்ள அரச அதிகாரிகள் மற்றும் சகல மட்டத்தினரையும் சந்தித்து கலந்துரையாடி இருந்தீர்கள். அவற்றின் நோக்கம் என்னவாக இருந்தது? சந்திப்புக்களில் ஏதாவது முன்னேற்றம் கண்டு கொண்டீர்களா?
மேலும்...

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்தப் போவதில்லை என அரசாங்கம் கூறுகிறது

பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்பதற்கான மனிதாபிமான நடவடிக்கைகளை கைவிடப்போவதில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டுஉரையாற்றிய பாதுகாப்பு பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்காகப் பிராந்திய வல்லரசான இந்தியா சார்க் மாநாட்டின்போது உடன்பாட்டுக்கு வந்தமை இலங்கை அரசாங்கத்திற்கு கிடைத்த வெற்றியாகும் எனவும் அமைச்சர் கெஹெலிய இங்கு சுட்டிக்காட்டினார்.
மேலும்....

பெங்களூரில் இன்றும் ஒரு குண்டுவெடிப்பு

பெங்களூர்: பெங்களூர் நாகரபாவியில் இன்று ஒரு சிறிய குண்டு வெடித்தது.
மைசூர் ரோட்டில் உள்ள நாகரபாவி பகுதியின் குப்பைத் தொட்டியில் இந்த குண்டு வெடித்தது. இதில் யாரும் காயமடையவில்லை.

முன்னதாக இது புரளி என போலீசார் தெரிவி்த்தனர். ஆனால், பின்னர் வெடித்தது குண்டு தான் என பெங்களூர் நகர போலீஸ் கமிஷ்னர் சங்கர் பித்ரி தெரிவித்தார்.
மேலும்....

அம்பாறையில் சிறிலங்கா அதிரடிப்படையினர் - கருணா குழுவினர் முறுகல்: அப்பாவி பொதுமக்கள் இருவர் கைது

அம்பாறை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில் சின்னத்தோட்டம் பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருக்கும் கருணா குழுவினருக்கும் இடையில் இடம்பெற்றுள்ள முறுகல் சம்பவத்தால் அப்பாவி பொதுமக்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.இந்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது:-
மேலும்...

முல்லைத்தீவை நோக்கி வெலிஓயா இராணுவத்தினர் நள்ளிரவில் நடத்திய கடும் எறிகணைத் தாக்குதல்: குழந்தை பலி; முல்லைத்தீவு அரச அதிபர் உட்பட 16 பேர் காயம்.

முல்லைத்தீவு நகரப்பகுதியை நோக்கி நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் இராணுவத்தினர் நடத்திய கடுமையான எறிகணைத் தாக்குதலில் ஒரு வயதுக் குழந்தையொன்று உடல் சிதறி மரணமாகியுள்ளது. முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி எமில்டா சுகுமார் மற்றும் முல்லைத்தீவு வைத்தியசாலைப் பணிப்பாளரின் மனைவி உட்பட 16 பேர் காயமடைந்துள்ளனர்
மேலும்....

தனது வெளியேற்றத்துடன் புலிகள் 60 வீத பலத்தினை இழந்துவிட்டனர் என்கின்றார் கருணா!

புலிகளுக்கு பெருமளவில் வெற்றிகளை ஈட்டிக் கொடுத்தது வலிந்த தாக்குதல்களே ஆகும் , நான் கூட வலிந்த தாக்குதல்களையே விரும்பிசெய்தேன் , ஆயுத வினியோகம் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருக்கும் விடுதலை இயக்கங்களுக்கு வலிந்த தாக்குதல் சாதகமாக இருக்கும் என கருணா சுருதிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்து இருக்கின்றார். அவர் மேலும் கூறுகையில் தற்போது படையினர் வலிந்த தாக்குதல்களை மேற்கொண்டுள்ள நிலையில் பாதுகாப்பு யுத்தத்தினை நடத்த வேண்டிய நிலைக்கு புலிகள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள், தற்பாதுகாப்பு யுத்தத்திற்கு தொடர்ச்சியான ஆயுத வினியோகம் இருக்கவேண்டும், பல முன் தாயாரிப்புக்களை மேற்கொள்ளவேண்டும்,
மேலும்...

கிளாலியில் இருந்து நாகர் கோவில் , மன்னார் கடற்கரையில் இருந்து கொக்கு தொடுவாய் ?

வன்னிப்பிரதேசத்தினையும் குடாநாட்டினை தொடுக்கும் கழுத்து பகுதியான கிளாலியில் இருந்து முகமாலை ஊடாக நாகர் கோவில் வரையிலான ஏறாத்தாள 12 கிலோ மீற்றர் நீளமுள்ள முன்னரங்க எல்லைப் பகுதியினையும், மன்னார் கடற்கரையில் இருந்து கொக்கு தொடுவாய் வரையிலான 115 கிலோ மீற்றர் நீளமான முன்னரங்க எல்லை பகுதியினையும் புலிகளின் போராளிகள் பாதுகாக்க வேண்டியுள்ளது. இவ்வகையான நீள எல்லைப் பகுதியூடாக படையினர் தமக்கு சாதமான யுத்த முனைகளை திறக்க முற்படுகின்ற போழுது அவர்களை எதிர்கொள்வதற்கான பெரும் எண்ணிக்கையான போராளிகளை புலிகள் நிறுத்த வேண்டியுள்ளது.
மேலும்....

முல்லைதீவிலும், கிளிநொச்சியிலும் கடும் யுத்தத்திற்காக காத்திருக்கும் புலிகள்!

அரசின் 59 ஆவது படைப்பிரிவினர் அவசரம் கொள்ளாது மிகவும் நிதானமாக முல்லைதீவு காட்டினை நோக்கி முன்னேற ஆரம்பித்து இருக்கின்றார்கள். கடந்த மே மாதம் 30 ஆம் திகதி படையினர் புலிகளின் முன்னகம் முகாமினை கைப்பற்றியதினை தொடர்ந்து ஜானகபுர, கிரிப்பன்வேவ, ஆண்டான்குளம், மற்றும் கொக்குதொடுவாய ஆகிய பகுதிகளின் ஊடாக முல்லைதீவு காட்டினை நோக்கி முன்னரக ஆரம்பித்துள்ளார்கள். பல அடி ஆழமுள்ள பாதாள அறைகளுடன் கூடிய புலிகளின் தலைவரின் மறைவிடம் என கருதப்படுகின்ற முகாமானது தற்பொழுது
மேலும்....

வெளிநாட்டு அதிகாரிகள் மீது ஈ கூட மொய்க்காத அளவுக்கு பாதுகாப்பு; அமைச்சர் ரோஹித பெருமிதம்

இந்திய இராணுவத்துக்கு நன்றி கூற தவறிவிட்டீர்கள்; ஜே.வி.பி.எம்.பி.கிண்டல் ஜீவா சதாசிவம் இந்தியா, தற்போது இலங்கைக்கொரு கேந்திர ஸ்தானமாக விளங்குவதுடன், இலங்கைக்கு பெருமளவிலான உதவிகளையும் வழங்குவதாக தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம, சார்க் மாநாட்டைச் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய சகலருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற அவசரகால நீடிப்பு பிரேரணை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது; இலங்கைஇந்திய உறவு இன்று உன்னதமான இடத்தில் உள்ளது. இந்தியாவின் மூலம் இலங்கைக்கு கிடைக்கும்
மேலும்.....

வாழைச்சேனையில் ஐஸ்வாடி உரிமையாளர் வீட்டின்மீது குண்டுவீச்சு // வாரியப்பொல வீதியில் டிப்பர் வாகனம் வெள்ளைவேனில் வந்தவர்களால் கடத்தல்

புத்தளம் மாவட்டம் சிலாபம் வாரியப்பொல வீதியில் டிப்பர் ரக வாகனமொன்று நேற்றிரவு இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டுள்ளது. வெள்ளைவேனில் பயணம் செய்த நால்வர் இந்த டிப்பர் வண்டியைக் கடத்திச் சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பொலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.
மேலும்...

புலிகளுக்கு பொருட்கள் கடத்த முற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இலங்கையர்கள் 11 பேர் கைது

புலிகளுக்கு பொருட்கள் கடத்த முற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இலங்கையர்கள் 11 பேரை ராமநாதபுரம் கியூ பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் கடலோர பகுதிகளில் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதா என பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 30ஆம் திகதியன்று வாகன வீதி சோதனையின் போது மின்கலங்கள், ஜி.பி.எஸ் கருவிகள் மற்றும் புலிகளின் சீருடைகள் பல கடத்தற் பொருட்களை பொலிஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும்...

அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்

அமைச்சர் மேர்வின் சில்வாவினால் நியூஸ் பெஸ்ட் ஊடகவியலாளர் தாக்கப்பட்டு, கமராக்கள் பறிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொள்ளுப்பிட்டியில் இன்று நண்பகல் ஆர்ப்பாட்டம் நடந்தது.சுதந்திர ஊடக அமைப்பு உள்ளிட்ட ஐந்து ஊடக அமைப்புக்கள் ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊடகவிலயாளர்கள்,
மேலும்...

மன்னார் அரச செயலக கூட்டங்களிற்கு ஊடகவியலாளர்கள் அழைக்கப்படுவதில்லையென கவலை

அரச செயலகத்தில் நடைபெறும் எவ்விதக் கூட்டங்களுக்கும் கருத்தரங்குகளுக்கும் மன்னார் ஊடகவியளார்கள் எவரும் அழைக்கப்படுவதில்லை . கூட்டங்கள் அனைத்தும் மூடிய திரைக்குள் நடைபெறுவதாக மன்னார் ஊடகவியளாலளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும்...

கிளிநொச்சி, முல்லைத் தீவில் கடந்த ஒரு மாதத்தில் 70,800 பேர் இடம்பெயர்வு

106 படையினர், 24 பொதுமக்கள் ஒரு மாதத்தில் பலி 684 பேர் காயம் ; சபையில் பிரதமர் தெரிவிப்பு

வன்னிமீதான படை நடவடிக்கை இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டதா?

கஞ்சா கடத்திய சிவில் பாதுகாப்பு படை அதிகாரி உள்ளிட்ட 3பேர் கைது

இந்தியாவுடனான உறவுகளில் எவ்வித பாதிப்பும் இல்லை வெளிவிவகார அமைச்சர்

இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங் திரும்பிச் சென்ற பின்பும் இந்தியப்படை விவகாரம் இன்னும் அடங்கவேயில்லை..

மணலாறில் ஐந்து முனை முன்னேற்ற நடவடிக்கை முறியடிப்பு: இராணுவத்தினரின் நான்கு உடலங்கள் உட்படப் படைப்பொருட்கள மீட்பு

முல்லைத்தீவை நோக்கி வெலிஓயா இராணுவத்தினர் நள்ளிரவில் நடத்திய கடும் எறிகணைத் தாக்குதல் - முல்லைத்தீவு அரச அதிபர் உட்படப் பலர் காயம்.

மாலைத்தீவில் புதிய அரசியலமைப்பு

திஸ்ஸாநாயகத்தை விடுதலை செய்யுமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் அரசிற்கு அழைப்பு

மனித உரிமை மீறல் சம்பவங்களின் தொடர்புடையவர்களுக்கு அமெரிக்கா ஒருபோதும் பாதுகாப்பு வழங்காது: அந்நாட்டு அரசு அதிகாரி தெரிவிப்பு

விமானப்படையினருக்கு சொந்தமான ஆளில்லா விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது

&முசலி பிரதேசத்தில் இருந்து இடம் பெயர்ந்துள்ள சுமார் 100 முஸ்லிம் குடும்பங்கள் எவ்வித அடிபடை வசதிகளுமின்றி தவிப்பு