கம்பஹா, மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து நடத்திய திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலின் போது 19 தமிழர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரையில் இந்த திடீர் சுற்றிவளைப்புத் தேடுதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமாகிய ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். இது தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் தொடர்ந்தும் கூறியதாவது கம்பஹா பொலிஸ் நிலையத்தை அண்மித்த பகுதியில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து நேற்று இரவு முதல் சுமார் 5 மணிநேரங்கள் வரையில் திடீர் சுற்றிவளைப்புத் தேடுதல் ஒன்றை மேற்கொண்டனர். இத்தேடுதலின் போது சந்தேகத்தின் பேரில் 18 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். தமது அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாதவர்களே இத்தேடுதலின் போது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தொடர்ந்தும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இதேவேளை இன்று அதிகாலை கண்டி பொலிஸ் வளாகத்தில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலின் போது தமிழ் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் சுமார் 27 வயதுடையவர் என பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இது நடுநிலமை செய்திகள் எவரையுமே தாக்குவனஅல்ல
2008-08-11
கம்பஹா, கண்டி பகுதிகளில் தேடுதல்; 19 தமிழர்கள் கைது
கம்பஹா, மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து நடத்திய திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலின் போது 19 தமிழர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரையில் இந்த திடீர் சுற்றிவளைப்புத் தேடுதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமாகிய ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். இது தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் தொடர்ந்தும் கூறியதாவது கம்பஹா பொலிஸ் நிலையத்தை அண்மித்த பகுதியில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து நேற்று இரவு முதல் சுமார் 5 மணிநேரங்கள் வரையில் திடீர் சுற்றிவளைப்புத் தேடுதல் ஒன்றை மேற்கொண்டனர். இத்தேடுதலின் போது சந்தேகத்தின் பேரில் 18 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். தமது அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாதவர்களே இத்தேடுதலின் போது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தொடர்ந்தும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இதேவேளை இன்று அதிகாலை கண்டி பொலிஸ் வளாகத்தில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலின் போது தமிழ் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் சுமார் 27 வயதுடையவர் என பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

