இது நடுநிலமை செய்திகள் எவரையுமே தாக்குவனஅல்ல

2008-08-11

அவிசாவளையில் போலி கச்சேரி கண்டுபிடிப்பு

கொழும்பு புறநகரான அவிசாவளை புவக்பிட்டியில் வீடொன்றில் இரகசியமான முறையில் இயங்கி வந்த போலி கச்சேரியை பொலீசார் நேற்று முன்தினம் கண்டுபிடித்துள்ளனர். இரகசிய தகவல் ஒன்றையடுத்தே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு பொலீசார் நடத்தி சோதனையின்போது போலியான பிறப்பு சான்றிதழ்கள், வெற்றுப்பத்திரங்கள், திருமண, மரண சான்றிதழ்கள், கடவுச்சீட்டுகள், அடையாளஅட்டைகள், முக்கிய அதிகாரிகளின் பெயருடைய றப்பர் முத்திரைகள், கடித தலைப்புக்கள், கடித உறைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன. அங்கு தங்கியிருந்த மலையகத்தைச் சேர்ந்த இரு தமிழர் இளைஞர்களும் கைதாகியுள்ளனர். அவசாவளை பிரதேச செயலகத்தைச் சேர்ந்த சில ஊழியர்களின் தொடர்புகளும் உள்ளவென்று பொலீசாரின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மேலும் சிலரை பொலீசார் தேடிவருகின்றனர்.