இது நடுநிலமை செய்திகள் எவரையுமே தாக்குவனஅல்ல

2008-08-11

ராகம விகாரையில் யானை மிரண்டது பெண் ஒருவர் பலி 32பேர் படுகாயம்

ராகமப் பகுதியில் உள்ள தல்கொல விகாரையில் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் யானை ஒன்று மிரண்டு ஓடியதில் அதன் காலில் மிதிப்பட்டு பெண்ஒருவர் உயிரிழந்தார். விகாரையில் நின்றவர்கள் பதற்றத்தில் தலைதெறிக்க ஓடியவேளையில் ஏற்பட்ட சனநெரிசலில் சிக்கி 32பேர் படுகாயமடைந்தனர் என தெரிவிக்கப்படுகிறது அந்த விகாரையில் நேற்று வருடாந்த பெரஹரா உற்சவம் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது பெரஹரா உற்சவத்திற்காக அந்த விகாரைக்கு கொண்டு வரப்பட்டிருந்த யானை ஒன்றே மிரண்டதாகவும் பொலிஸார் கூறினர். காயமடைந்தவர்கள் ராகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.