இது நடுநிலமை செய்திகள் எவரையுமே தாக்குவனஅல்ல

2008-08-12

ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சியை 100 வீதம் ஏற்றுக் கொள்ள முடியாது -மைத்திரிபால சிறிசேன

சிறீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளரும் சிரேஷ்ட அமைச்சருமான மைத்திரபால சிறிசேன ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பகிரங்கமாக விமர்சித்துள்ளதாக பீ.பி.சீ உலக சேவை செய்தி வெளியிட்டுள்ளது. அரசாங்கத்தின் செயற்பாடுகளை 100வீதம் ஏற்றுக் கொள்ள முடியாதெனப் பொலன்னறுவை பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது தெரிவித்துள்ளார். அமைச்சர் என்ற ரீதியில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் பல கொள்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சரும் சிறீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளருமான மைத்திரிபால சிறிசேனவின் இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.