இது நடுநிலமை செய்திகள் எவரையுமே தாக்குவனஅல்ல

2008-08-11

தாய்லாந்தில் ஹெலிகொப்டர் விபத்து 4 இராணுவ அதிகாரிகள் உட்பட 10 பேர் பலி

தாய்லாந்தில் ஹெலிகொப்டரொன்று விழுந்து 4 இராணுவ உயர் அதிகாரிகள் உட்பட 10 பேர் பலியாகியுள்ளனர். உயரதிகாரிகள் மற்றும் வீரர்களுடன் தென் மாகாணமான யாலா மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த போதே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் பயணித்த 10 பேரும் பலியாகியுள்ளனர். விபத்து இடம்பெற்ற பகுதி தீவிரவாதிகளின் நடமாட்டம் நிறைந்ததாகும்.எனவே ஹெலிகொப்டர் இயல்பாகவே விபத்துக்குள்ளானதா அல்லது தீவிரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதா என்பது இதுவரை தெளிவாகவில்லை. ஆனால், இது தீவிரவாதிகளின் சதிவேலையாக இருக்காதென நம்புவதாக இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.