கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துக்கூறிய அவர் தெரிவித்ததாவது: விடுதலைப் புலிகள் இயக்கம் பலவீனமடையும்போது சர்வதேச ரீதியிலும் தேசிய ரீதியிலும் பல்வேறு ஆழுதங்கள் பிரயோகித்து பேச்சுவார்த்தை என்ற தோரணையில் தம்மை மீள கட்டியெழுப்புவதே வரலறாகவுள்ளது. இதனை நான் கூறவேண்டிய அவசியமில்லை. ஊடகவியலாளர் என்ற ரீதியில் நீங்கள் இதனை அறிந்து இருப்பீர்கள் ஜனாதிபதி ரணசிங்க பிரேம தாஸாவின் காலத்தில் ஹில்டன் ஹொட்டலில் பல மாதங்களாக சமாதானப் பேச்சுக்கள் நடைபெற்றன. இறுதியில் புலிகளால் 600க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இந்த உபாயத்தை அடிக்கடி புலிகள் கையாண்டுவருகின்றனர்.
2008-08-12
ஒழுக்க விழுமியமுள்ள மனிதர்களாக விடுதலைப் புலிகள் நடந்து கொண்டால் மாத்திரமே சமாதான முயற்சி சாத்தியம் - கெஹலிய
கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துக்கூறிய அவர் தெரிவித்ததாவது: விடுதலைப் புலிகள் இயக்கம் பலவீனமடையும்போது சர்வதேச ரீதியிலும் தேசிய ரீதியிலும் பல்வேறு ஆழுதங்கள் பிரயோகித்து பேச்சுவார்த்தை என்ற தோரணையில் தம்மை மீள கட்டியெழுப்புவதே வரலறாகவுள்ளது. இதனை நான் கூறவேண்டிய அவசியமில்லை. ஊடகவியலாளர் என்ற ரீதியில் நீங்கள் இதனை அறிந்து இருப்பீர்கள் ஜனாதிபதி ரணசிங்க பிரேம தாஸாவின் காலத்தில் ஹில்டன் ஹொட்டலில் பல மாதங்களாக சமாதானப் பேச்சுக்கள் நடைபெற்றன. இறுதியில் புலிகளால் 600க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இந்த உபாயத்தை அடிக்கடி புலிகள் கையாண்டுவருகின்றனர்.
ருஹுனு பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் மோதல் 11 பேர் ஆஸ்பத்திரியில் இருவரின் நிலைமை கவலைக்கிடம்
யாழ்ப்பாணத்தில் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கு கப்பல் செலவை அரசு பொறுப்பேற்கக் கோரிக்கை
இத்தகைய அதிகரித்த விலையைக் குறைப்பதற்கு வழி கப்பல் செலவினங்களை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். இது தான் விலைகளைக் குறைப்பதற்குரிய ஒரேயொரு வழி எனவும் யாழ் மாவட்ட சமாதானத்திற்கும் நல்லெணத்திற்குமான மக்கள் குழுவின் இணைச் செயலாளர் எஸ்.பரமநாதன் தெரிவித்துள்ளார்.
மடுக்கோவிலுக்குச் செல்ல தென்பகுதிகளில் இருந்து வருபவர்களுக்காக, மதவாச்சியில் 20 பஸ் வண்டிகள் தயார்
எனினும் மதகுருமார்களைத் தவிர்ந்த வேறு எவரும் மடுக்கோவிலுக்குச் செல்வதற்கு நேற்று படையினர் அனுமதிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மடு அன்னை மீண்டும் மடுக்கோவில் பிரதிஸ்டை செய்யப்படும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மாரவில பகுதியில் இருந்து மூதாட்டி ஒருவர் மதவாச்சி மன்னார் வீதியில் உள்ள மடுக்கோவில் சந்தியில் வந்து காத்திருந்ததாகவும், எனினும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி இல்லாத காரணத்தினால் மடுக்கோவிலுக்குச் செல்வதற்கு அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் மடுக்கோவிலுக்குச் செல்வதற்காக தென்பகுதியில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை மதவாச்சியைச் சென்றடைந்த சில பக்தர்களை பொலிசார் அங்கிருந்து 2 பஸ் வண்டிகளி;ல் மடுக்கோவிலுக்கு அனுப்பி வைத்ததாக மதவாச்சியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளொன்றிற்கு 200 பக்தர்கள் மடுக்கோவிலுக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ள அதேவேளை, மடுக்கோவிலுக்குச் செல்பவர்கள் அதே தினம் அங்கிருந்து திரும்பிவிட வேண்டும் என படையினர் அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இம்முறை மடுமாதாவின் ஆவணி மாதத் திருவிழா நடைபெற மாட்டாது என்றும், காலை நேரத்தில் மாத்திரம் பூஜை நடைபெறும் என்று மன்னார் ஆயர் இல்லம் அறிவித்துள்ளது.
கல்ப் டைம்ஸ் பத்திரிகை தனது பட விளக்கத்தில் விட்ட தவறுக்காக மன்னிப்பு கோரியுள்ளது
ஒலிம்பிக்கின் ஆரம்ப நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக சீனாவுக்கு தனது பாரியாருடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விஜயம் செய்திருந்த புகைப்படத்தின் படவிளக்கத்தில் விடப்பட்ட தவறு தொடர்பில் கல்ப் டைம் பத்திரிகை மன்னிப்பு கோரியுள்ளது. இது தொடர்பில் தாம் மன்னிப்பு கோரியும் இந்த படம் மற்றும் படவிளக்கத்தையும் நாளை மீள் பிரசுரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8.8.08 இல் 8 மணி 08 நிமிடத்தில் 8 இறாத்தல் 8 அவுன்ஸில்.. 2 குழந்தைகள்
ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சியை 100 வீதம் ஏற்றுக் கொள்ள முடியாது -மைத்திரிபால சிறிசேன
விருந்து உணவை உண்ட 60 பேர் வயிற்று நோவால் வைத்தியசாலையில் அனுமதி
தவறு விட்ட பத்திரிகை
ஒலிம்பிக்கின் ஆரம்ப நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக சீனாவுக்கு தனது பாரியாருடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விஜயம் செய்திருந்தமை அனைவரும் அறிந்த ஒரு விடயம்.இது குறித்து கல்ப் டைம்ஸ் என்ற பத்திரிகை தனது பட விளக்கத்தில் இலங்கை ஜனாதிபதியின் பாரியாரை சிறிமாவோ பண்டாரநாயக்க என்று தவறாக குறிப்பிட்டுள்ளது.
நளினியின் விடுதலை தொடர்பான வழக்கில் 20ஆம் திகதி பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும்-தமிழக அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சிறை விதிகளின்படி 14 ஆண்டுகள் ஆயுள் தண்டனை பெற்ற கைதி நன்னடத்தை விதிகளின்படி விடுதலை செய்யப்பட வேண்டும். இது தொடர்பாக சிறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் அடங்கிய ஆலோசனைக் குழுவிடம் முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அந்த மனு ஆலோசனைக் குழுவால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை அடிப்படையாகக் கொண்டு தமிழக அரசு என்னை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு மறுப்புத் தெரிவித்து விட்டது. எனவே, இந்த முடிவை ரத்துச் செய்ய வேண்டும்; முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் நளினி கூறியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி நாகமுத்து முன்னிலையில் நடைபெற் வருகிறது. நேற்று இந்த வழக்கானது மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் மாசிலாமணி ஆஜராகி பதில்மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து நீதிபதி எதிர்வரும் 20ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தார். அன்றைய தினம் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.இதேபோன்று ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வரும் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய இரண்டு இலங்கை தமிழர்களும் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி மனுதாக்கல் செய்திருந்தனர்.
அந்த இரண்டு மனுக்களையும் இதே வழக்கோடு சேர்த்து விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்தார். மேலும், நளினி ஆலோசனைக் குழுவிடம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கையும் தன்னுடன் சேர்த்து விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்தார். ஆனால், அந்த வழக்கில் ஆஜரான சட்டத்தரணி ராதாகிருஷ்ணன் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.
ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி தொடர்ந்த வழக்கில், அவரது வழக்கறிஞர் ரவி இந்த வழக்கோடு தங்களது வழக்கையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். எனினும், நீதிபதி அதற்கு மறுப்பு தெரிவித்தார்.
வன்னியில் தொடர்ந்து இடம்பெயரும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் சென்றடைய வேண்டும்,அனைத்துலக மனித உரிமை கண்காணிப்பகம் அறிவிப்பு
மடுமாதாவை வழிபட தினமும் 200 பக்தர்களுக்கு அனுமதி - பாதுகாப்பு அமைச்சு
நாளை செவ்வாய்க்கிழமை முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை மடு புனிதத்தல பிரதேசத்திற்கு பொது மக்கள் பகல் வேளைகளில் பிரவேசிக்க முடியும் எனவும் அங்கு சமய வழிபாடுகளில் ஈடபட முடியும் எனவும் பாதுகாப்பு அமைச்சு இன்று இரவு அறிவித்துள்ளது.
மடு தேவாலயத்தை சூழவுள்ள பிரதேசங்களை குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளதால் தினமும் 200 பக்தர்களை அனுமதிக்க தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சு,தேவாலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு தேவையான குடிபானங்களை வழங்க படையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
2008-08-11
ஜார்ஜியாவின் தெற்கு ஒசெட்டியா மாகாணத்தில் அந்நாட்டு படைக்கும், ரஷியப் படைக்கும் இடையே இதுவரை நடந்த சண்டையில் 1,500 பேர் பலி
ஐ.நா. எச்சரிக்கை: ஜார்ஜிய ராணுவத்துக்கும் ரஷிய ராணுவத்துக்கும் இடையேயான சண்டையில் பொதுமக்கள் கொல்லப்படுவதை ஐ.நா. கண்டித்துள்ளது. ஜார்ஜியாவில் கொல்லப்படும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து, நிலைமை மோசமாகி வருகிறது. இதை தான் கடுமையாக கண்டிப்பதாக ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஜார்ஜியாவின் தெற்கு ஒசெட்டியா ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதைத் தங்கள் வசம் கொண்டுவர ஜார்ஜியா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதனால் அங்கு முகாமிட்டுள்ள ரஷியப் படைகளுக்கும், அந்நாட்டு படைகளுக்கும் இடையே அவ்வப்போது சண்டை நடந்து வருகிறது. இந்தச் சண்டை வெள்ளிக்கிழமை முற்றியது. ரஷியப் படைகள் மீது ஜார்ஜியா படை திடீரென அதிரடித் தாக்குதல் நடத்தியது.
தாய்லாந்தில் ஹெலிகொப்டர் விபத்து 4 இராணுவ அதிகாரிகள் உட்பட 10 பேர் பலி
இலங்கையில் போர் தீவிரம் அப்பாவி தமிழர்களுக்கு பாதுகாப்பு தேவை: ஐ.நா. வலியுறுத்தல்